Wednesday 23 July 2014

அடச்சே

           அடச்சே

அன்று மலர்ந்த அரளிப்பூ
அவன் கண்ணில் படவில்லை.
அழகிய குழந்தை முத்தம் கேட்டது
அவன்  செவிகளில்  விழவில்லை
அதிகாலை தென்றலை
அவன் உடல் உணரவில்லை
அவள் போட்ட கோலமும்
அழகாய் தெரியவில்லை -எதிரில்
அவள் அன்னநடையிட்டு
புன்னகை  செய்ததுகூட தெரியவில்லை
வெறிநாயொன்று துரத்தி அவன்
வேகமாய் ஓடுகையில்...

          
            -சுபாஷினி 

1 comment: