Friday 4 July 2014

வாழ்க்கை ஒரு வட்டம்

 வாழ்க்கை ஒரு வட்டம்

"உருவத்தில் பெரியவளாயிருந்தும்
உண்மையானவளாயிருந்தும், என்போல் 
உள்ளே வரமுடிந்ததாடீ உன்னால்?
வந்தவர்கள் செருப்புக்குத் துணையாய்
வாசலிலேயே தொங்கி நில்லடி"- என
பந்தலில் இருந்த வாழைமரப் பூவை
பரிகாசம் செய்தன
கல்யாண மேடையின் காகிதப்பூக்கள்.
கண்ணைப்பறிப்பது போல்
கவர்ச்சியாய் இருக்கிறாய் என்றவன்
கல்யாணம் முடிந்ததும்
கழற்றிவிட்டான்..
கசங்கிப்போன காகிதப்பூக்கள்
கர்வத்தைத் தொலைத்து
கதறின குப்பைத்தொட்டியில்..
வாழைப்பூ பொறியல் விருந்துசாப்பாட்டிற்காக 

வரதட்சணையாய் வந்த சட்டியில்..

No comments:

Post a Comment