Monday 3 June 2013

காக்கையின் மறுஜென்மம்







 பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்
பாட்டி சுட்ட வடையை திருடி-அதை
நரியிடம்  பறிகொடுத்து, பசியால் வாடி
பானையில் கல் போட்டு நீர் அருந்திய
பாண்டியன் கோட்டையில் வசித்த காகம் -இன்று

மெரினா கடற்கரையில்
மீன் வறுவல் தின்று
கண்ணகி சிலையின் மீது
கழிவுநீக்கம் செய்துகொண்டே சொன்னது

"மனைவியை விட்டு மற்றவளுடன் சென்றவனை
மரக்கட்டையால் அடிக்காமல் -ஏனடீ
மதுரையையும் மதில்மேலிருந்த  என்
கூட்டையும் எரித்தாய்?" -என்று

No comments:

Post a Comment