மாற்றம்
இருள் சூழ்ந்த என் வீதியில்
இரவெல்லாம் பௌர்ணமி ஆனது.
சீரற்ற என் பாதை
தாரூற்றி மெருகேறியது.
நீரற்ற என் பானை
நிரம்பி வழிய வழிகிடைத்தது.
நாரிக் கிடந்த சாக்கடை கூட
வாரி இறைத்து தூய்மையானது.
சின்னங்கள் சுவரில் பொறித்து
வண்ணங்கள் கொடியில் பறந்து
வாக்குறுதிகள் காற்றில் பறக்கவைத்திடும் -
"தேர்தல்."
No comments:
Post a Comment