மழை
கரியமில வாயுவால்
கறை படிந்த மேகத்தை
கருணையுடன் மழையாக
கசக்கி பிழிகிறது வானம்.
அலசி முடித்த பின்
அழுக்கு நீரை ஆகாயத்திலிருந்து
அறுவறுப்புடன் அப்படியே
ஊற்றிவிட்டது உத்திரகாண்ட்டில்.
அடுத்த சலவைக்கு
அழைத்துவிடாமல்
அண்ணாந்து பார்த்து கொள்வோம்
ஆகாயத்தை..
No comments:
Post a Comment