Monday 14 October 2013

மழை




கரியமில வாயுவால்
கறை படிந்த மேகத்தை
கருணையுடன் மழையாக
கசக்கி பிழிகிறது வானம்.
அலசி முடித்த பின்

அழுக்கு நீரை ஆகாயத்திலிருந்து 
அறுவறுப்புடன் அப்படியே
ஊற்றிவிட்டது உத்திரகாண்ட்டில்.
அடுத்த சலவைக்கு
அழைத்துவிடாமல்
அண்ணாந்து பார்த்து கொள்வோம்
ஆகாயத்தை..

No comments:

Post a Comment